Wednesday, November 10, 2010

மழைக்கவிதையை


மேகம் அப்பிக் கிடக்கும் இந்தக் காலையில்
நனைந்து கொண்டிருக்கும் காக்கையொன்று தன்
அலகால் கொத்தித் தின்கிறது இந்த மழைத்துளியை.

தனியே குடை பிடித்து நடந்து செல்கிறாள்
சிவந்த ஆப்பிளையொத்த சிறுமியொருத்தி
மேகங்களை மென்று கொண்டு.

எப்பொழுதும் சோர்ந்து போய் துவண்டு கிடக்கும் இந்த
பெயர் தெரியாத மரம்
அள்ளி அள்ளி முகத்தில் தெளிக்கிறது தனது
பச்சையை.

மழை ருசித்து,
என்னை குடித்துக்கொண்டிருக்கிறது
சூடான இந்த கடுங்காப்பி.

எழுத முயலும் ஏன் விரல்களின் நடுவே நழுவி,
உருண்டோடும்
அத்தனை வார்த்தைகளும்,
தொப்பலாய் நனைந்து
நடனமாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

சிறிது நேரத்தில் கண்ணாடி சிறையொன்றிற்குள்
அடைபட்டொழியப்போகும்
நான்
எங்கு சென்று தேடுவது
நீ கேட்ட
உனக்கான
மழைக்கவிதையை?

The Shaw shank Redemption


It was way back in my eighth read a novel called “The Shaw Shank Redemption” at the good old library of TVS Lakshmi Matriculation School where I read nearly off 50 books and novels between the periods of 4th Standard to 9th Standard. I was not a book worm then because I never knew the value of books can grow up my extra knowledge apart from the subject.

Last night as the whole city of Madurai was busy in some diwali purchases, I moved into a CD shop to avoid heavy showers of rain. There I found the CD of The Shaw shank Redemption and got it for a high sum of Rs 50/- although pirated CD‘s are available for cheap twenties.

The novel written by Stephen King, stating about a story of Andy Durfresene who is a banker and is arrested for murdering his wife and loved one. While the hero is jailed for two continuous life sentences in Shaw sank prison, the male protagonist knowledge on money and finance helps him to gain an advantage in the organogram by assisting his fellow mates in the confinement. This extends later even to the guards and police officials later.

Saturday, November 6, 2010

தீராத் தனிமை

புழுதியில் புரண்டு கிடக்கும் மாலை
பிய்ந்து போன ஒற்றை செருப்பு
ஒரு தெருநாயின் நீண்ட ஓலம்
ஒற்றை தெருவிளக்கின் வெளிச்சக்கதறல்

Friday, November 5, 2010

நிகழும் நொடி

கொட்டித் தீராததொரு பெருங்கோபத்துடன்
தறிகெட்டுத் திரிந்து கொண்டிருக்கும்' இந்த மழைக்கும்,
கத்தித்தீராததொரு பேரோலத்துடன் பிரபஞ்சத்தை
பிளந்து கொண்டிருக்கும் இந்த மின்னல் கீற்றுக்கும்
குடித்துத்தீராததொரு பெருந்தாகத்துடன் குளிரை
குடித்துக்கொண்டிருக்கும் இந்த கரும் இரவிற்கும்
ஆடித்தீராததொரு ஆனந்தத்துடன்
கூத்தாடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை நொடிக்கும்
பூட்டிய கதவிற்குப் பின்னும்
மூடிய போர்வைக்குள்ளும்
சுருண்டு கிடக்கும் என்னிடம்
என்ன இருக்கிறது
திருப்பிக் கொடுப்பதற்கு,
ஒரு கவிதையையும்
என் நிர்வாணத்தையும் தவிர?

Tuesday, October 26, 2010

வரலாறு


முதுகெலும்புகளால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த
குள்ளநரியின் விருந்தாளியாய் வந்திருந்தது
மண்டையோடுகளை கிரீடமாகக் கொண்ட, குருதி தோய்ந்த
பற்களையுடைய ஓநாய்.
பிணங்களால் ஆன அரங்கில் நடந்துகொண்டிருந்தது
பன்றிகளின் களியாட்டம்.
இரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சூனியக்காரி.
வாய் தைக்கப்பட்ட, முதுகெலும்புகள் உருவப்பட்ட
கூட்டமொன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
தூரத்தில்
ஒரு நொடி மட்டுமே எழுந்த பாடல் ஒன்று ஊமையானது
ஒரு எழுத்து மட்டுமே எழுதப்பட்டிருந்த கவிதை ஒன்று முடிந்து போனது.
ஆனாலும்
கண்ணிலிருந்த நரம்பு ஒன்றை உருவி இசைத்துக்கொண்டிருந்தான்
ஒரு இளைஞன்
பொய்க்கண்ணாடி ஒன்றை உடைப்பதற்கு.
கனவிலிருந்து ஒரு சொல்லை உருவி கவிதை
எழுதிக்கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி
பொய்க்கணக்கு ஒன்றை திருத்தி எழுதுவதற்கு.
உயிரில் இருந்து உருவப்பட்ட மின்னலைக்கொண்டு
பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஒரு போர் வீரன்
மலங்களைத்தின்னும் பேய்களை விரட்டுவதற்கு.
வாய் தைக்கப்பட்ட
கண்கள் பிடுங்கப்பட்ட
கைகள் வெட்டப்பட்ட
கால்கள் ஒடிந்து போன
இரத்தம் வற்றிப்போன
ஒரு கூட்டத்தின் நடுவே தவழ்ந்து கொண்டிருந்த
ஒரு சிறுவனின் ஒற்றை கண்
கனவு கண்டுகொண்டிருந்தது முடிவில்லாமல்
நட்சத்திரம்
பட்டாம்பூச்சி மற்றும
எழுதப்படாத ஒரு வெள்ளைக்காகிதத்தின் முதல் வரியை பற்றி
Note:This piece of scribble is dedicated to Mr.Wolf(Rajapakse), Mr.Dirty fox(Manmohan singh), Mrs.Witch(Sonia gandhi) and to all those oppressors out there dreaming of ruling the world forever and ever.

Insight


Expressing love is an art and I seriously lack in it.We have been known as good friends by the community known to us. But I dont know why the hell has the animal inside me has creeped in to say a different relation. I know her she has engaged herself to one of my friends who I know by acquittance.

For the past week, one question I kept repeating was Why? I came into a final conclusion the reason is foolish and would not miss a evergreen friend for the upcoming seasons. She might have mentally disturbed me, when I tuned some melodious duets went on the television or gazing in a store near by home which bears with the same name of her, but she has given has a new experience of something new.

She would be wedlock next year and I know I have promises to keep. As a nomad, I cant be in a place where she is and I have to move on as sages and birds dont stay in a single place.

THank U My Girl,
Srivathsan

Wednesday, October 13, 2010

விடியலை நோக்கி


பயணிக்கிறது வாழ்க்கை
இடையில் இருட்டில் இடமறியா பொழுதில்
இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி
இடையூறு செய்கையில் - கிடைத்த
இடைவெளியில் கிடு கிடுவென
விரைகிறது வாழ்க்கை பயணம்!

நெடுதூர நடைபாதை நடப்பதறியா பயணம்
நினைவுகள் நிஜமாகுமா என்ற ஏக்கத்தை
நடுக்கடலில் நிறுத்துகிறது நங்கூரங்கள்
நீங்காத நினைவலைகள் கரைகிறது
நிலவின் பிறைகளாய்
நடு நடுவில் நகர்த்துகிறது
நம்பிக்கை வார்த்தைகள்!

எங்கு செல்கிறோம் என்ன செய்கிறோமென்று
எண்ணுவதற்குள் எத்தனை பிரச்சினைகள்
எத்தனை சிக்கல்கள் அத்தனையும் தாண்டி
எண்ணியதை அடைய
எண்ணம் போல் வாழ
எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்
எடுக்கும் முயற்சிகள் அத்தனையும்
ஏக்கத்தை நிறைவாக்கும் ஏணிப்படிகள்!

காலங்கள் சுழல, நாட்களும் நகர்கிறது
கால்களும் நடை பதிக்கிறது
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றாய் பறந்து போன நாட்களை
காவியங்கள் தான் கதையாய் சொல்லுமோ?
காற்றாடியை கயிறுகளால் கட்டி
கண்ணாடிக்குள் வைத்து அழகுதான் பார்க்க முடியுமா?
கவிதையாய் நாட்கள் கழிய நானும் காத்திருக்கிறேன்
காலத்தின் கைகளில்!

சந்தோஷமும் சலிப்பும் சரிசமமாய்
சுற்றம் வாழ்த்த சராசரியாய்
சொந்தம் போற்ற செயற்கையாய்
சுயத்திற்காய் சமாளிப்புக்கள் எத்தனை எத்தனை
சீராய் செல்லும் ஒருவழி பாதையில்
சிந்தனைக்கெட்டாத சுதந்திரம் கிடைத்தாற்போல்
சீக்கிரமாய் நடைகள் இடையில்
சிறு சிறு இடறல்கள், சிந்தித்துப்பார்த்தால்
சில்லரைகளை செலவழித்துப் பெற்ற
சலவை நோட்டு தான் வாழ்க்கை!

உழவர் காத்த பூமியை ஊடகங்கள் காக்கிறது
உண்மையை அறிந்தும் உமிழ் விழுங்கி
ஊமையனாகி போனது அவலம்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்
உனக்கெதற்கு ஊர்வம்பு என்று
உள்ளத்தில் உள்ளதை உரைக்க முடியாமல்
உணர்ச்சிகளை உண்டியலில் சேமிக்கிறேன்
உடைந்த சில்லுகளாய்
உள்ளக்குமுறல்கள் உப்பாய் கரைகிறது ஊருக்காக
உயிர்வளர்த்த உறவுகளுக்காக என் உழைப்பும்
உருளும் உலகில் உழல்கிறது என் பயணமும்!

பண்பும் பாசமும் இங்கு பாதி விலையில்
பண்பாடு எங்கோ பாடத்தில் படித்த ஞாபகம்
பண்பை பறைசாற்றிய பாரதத்தை
பங்கு போட பங்காளிகள் தயார்
பாரதமாதாவை படுக்க வைத்து படையலிட்டு
பாட்டுப்பாடி பாடையில் ஏத்துகிறார்கள்..
பதறுகளே, நம் பாரதத்தின் பெருமையை
புரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லையடா என்று
புலம்ப தான் முடிகிறது என்னால்
பதறுகிறேன் பறைசாற்ற முடியாத
பரிதாப நிலையில் நானும் பயணிக்கிறேன்
பிறந்த மண்ணில் பரதேசியாய்!

வானளவிற்கு உயர வேண்டும் என்று
வாய் கிழிய பேசி பேசி
வீணடித்த நிமிடங்கள் எத்தனை எத்தனை
விரயமாக்கிய பணங்கள் எத்தனை எத்தனை
விடுதலை பெற விரும்பும் மனமும்
விடுவிக்க மனமில்லாத சமுதாயமும்
வியர்வையின் பரிசாய் வீடு வாசலும்
விண்ணப்பிக்காமல் எனக்கு கிடைத்த குடும்பமும்
விலைமதியா சொத்தாகிய என் குழந்தைகளையும்
விட்டு விட்டு விடைபெற்று செல்லும் போது
விண்ணும் மண்ணும் கேட்கும் டேய் மனிதா!
விருந்தாளியாய் வந்த நீ எதை
விதைத்து விட்டுச் சென்றாய் என...

மனிதா!
மண்ணுக்குள் மறையும் முன்
மனிதத்தையாவது விட்டு விட்டுச் செல்!